சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஆறு நாட்கள் கன கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்வதால் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும் இது வலுவான காற்று சுழற்ச்சியாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரப்படுத்தும் என கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 9, 10, 11, 13,14, 15, ஆகிய 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்று சுழற்சி:
இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}