சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஆறு நாட்கள் கன கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்வதால் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும் இது வலுவான காற்று சுழற்ச்சியாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரப்படுத்தும் என கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 9, 10, 11, 13,14, 15, ஆகிய 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்று சுழற்சி:
இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}