சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஆறு நாட்கள் கன கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்வதால் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும் இது வலுவான காற்று சுழற்ச்சியாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரப்படுத்தும் என கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 9, 10, 11, 13,14, 15, ஆகிய 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்று சுழற்சி:
இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}