சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஆறு நாட்கள் கன கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்வதால் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும் இது வலுவான காற்று சுழற்ச்சியாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரப்படுத்தும் என கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 9, 10, 11, 13,14, 15, ஆகிய 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்று சுழற்சி:
இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!
பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
{{comments.comment}}