வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!

Dec 13, 2025,10:37 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


உன்னைப் போல யார் உத்தமன்

உருகும் மெழுகாய் கண்ணனுடன்

உயிரில் கலந்த உறவாய் அமுதன்

உண்மை அன்பில் கேசவன்

உள்ளம் தன்னில் சுமந்த சுந்தரன் நீ

உதிரம் பாலாய் ஊட்டிய யசோதை இளஞ்சிங்கமே

உதரம் ஏந்திய உத்தமி தேவகிமகனே

உந்திக் கொடியின் முடிவே முகுந்தா பல்லாண்டு பல்லாண்டு


அதரம் அழகு

சிந்தனை அழகு

பவள

செந்தமிழ்

மதுரம் மதுரம்

வைகறை அழகு

அந்திபொழுது அழகு

கறவைகளுடன்

சேயுமழகு 

குடகுக் கடலில்

கறையும் பகலவன் அழகு அழகுடன் செந்தமிழே அழகு




ஞாளியாய் நான் பிறந்திடினும்

நாரணா உன் சந்நிதிமுன் 

விடாது திரிந்தலைந்து 

உன்பக்தர் அடிபதித்த தூய்மையான இடம்புரண்டு 

தந்நிகரில்லா புகழெய்தி பகைவனான 

தீவினையகன்று நெருங்கி உனையே அடைவேனே!


நின்னபய திருவடியிருக்க 

எனை தாபம் அண்டுமோ! 

நின் கமல கரமிருக்க 

எனைத்துன்பம் தீண்டுவதோ!

என் வாழ்வே 

உன் திருவடியிலே 

இன்விழி அரங்கா!

சேயென்ன நோக்கிடுவாயே!


ஆண்டாள் குழந்தை  

செவிமடுத்து கதை கேட்டவள்

ஶ்ரீ ரங்கத்து நாயகனை

தனக்கென்று காயத்தில்

சேர்த்த வள்!

கணவனை கடவுளாய்

பார்த்த பெண் இனம்

அந்த-கடவுளையே

கணவனாய் பார்த்தது

இவள் மனம்!

பெண் யென்றால்

பேயும் யிறங்கும்

பேச்சுக்கு...

ஆனால் -அந்த

பெருமாளு(னு)ம்

இறங்கினார் அவ

மூச்சுக்கு! வருக வருக 

இரங்கராஜனுடன் திவயதம்பதிகளாகவே


நாளும் நாரணஹரி 

எனையாளும் ஏகாந்தஹரி 

உனையாளும் உத்தமஹரி 

தனையாளும் தரணிஹரி 

புவியாளும் புன்னகைஹரி 

நாடாளும் நரநாரணஹரி

வந்தாளும் வருணஹரி

பண்பாடும் பரந்தாமஹரி


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்