வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!

Dec 13, 2025,10:37 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


உன்னைப் போல யார் உத்தமன்

உருகும் மெழுகாய் கண்ணனுடன்

உயிரில் கலந்த உறவாய் அமுதன்

உண்மை அன்பில் கேசவன்

உள்ளம் தன்னில் சுமந்த சுந்தரன் நீ

உதிரம் பாலாய் ஊட்டிய யசோதை இளஞ்சிங்கமே

உதரம் ஏந்திய உத்தமி தேவகிமகனே

உந்திக் கொடியின் முடிவே முகுந்தா பல்லாண்டு பல்லாண்டு


அதரம் அழகு

சிந்தனை அழகு

பவள

செந்தமிழ்

மதுரம் மதுரம்

வைகறை அழகு

அந்திபொழுது அழகு

கறவைகளுடன்

சேயுமழகு 

குடகுக் கடலில்

கறையும் பகலவன் அழகு அழகுடன் செந்தமிழே அழகு




ஞாளியாய் நான் பிறந்திடினும்

நாரணா உன் சந்நிதிமுன் 

விடாது திரிந்தலைந்து 

உன்பக்தர் அடிபதித்த தூய்மையான இடம்புரண்டு 

தந்நிகரில்லா புகழெய்தி பகைவனான 

தீவினையகன்று நெருங்கி உனையே அடைவேனே!


நின்னபய திருவடியிருக்க 

எனை தாபம் அண்டுமோ! 

நின் கமல கரமிருக்க 

எனைத்துன்பம் தீண்டுவதோ!

என் வாழ்வே 

உன் திருவடியிலே 

இன்விழி அரங்கா!

சேயென்ன நோக்கிடுவாயே!


ஆண்டாள் குழந்தை  

செவிமடுத்து கதை கேட்டவள்

ஶ்ரீ ரங்கத்து நாயகனை

தனக்கென்று காயத்தில்

சேர்த்த வள்!

கணவனை கடவுளாய்

பார்த்த பெண் இனம்

அந்த-கடவுளையே

கணவனாய் பார்த்தது

இவள் மனம்!

பெண் யென்றால்

பேயும் யிறங்கும்

பேச்சுக்கு...

ஆனால் -அந்த

பெருமாளு(னு)ம்

இறங்கினார் அவ

மூச்சுக்கு! வருக வருக 

இரங்கராஜனுடன் திவயதம்பதிகளாகவே


நாளும் நாரணஹரி 

எனையாளும் ஏகாந்தஹரி 

உனையாளும் உத்தமஹரி 

தனையாளும் தரணிஹரி 

புவியாளும் புன்னகைஹரி 

நாடாளும் நரநாரணஹரி

வந்தாளும் வருணஹரி

பண்பாடும் பரந்தாமஹரி


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்