- கலைவாணி ராமு
கஷ்டங்களை
கழி
இன்னல்களை
கழி
பழையன
கழி
மனதை தெய்வீகமாக்க
உணர்வை
உன்னதனமாக்க
வீதிகளில்
வண்ண கலர் கோலம்...
மனதில் பக்தி
திருக்கோலம்
சூடி கொடுத்த
சுடர் கொடியாளை
கொண்டாடும்
மாதம்..

கள்ளன்
கண்னனை
மலர் மாலையால் கோதை மயக்கிய
மாதம்...
துளசி வாசம் வீசும் மாதம்..
சுந்தர வடிவில்
விடியும் தினமும் காலை பொழுது....
முற்றத்தில் தீப ஔி...
மொத்தத்தில் இம்மாதம் மங்கள கரமான
மாதம்.....
தேவர்களின் மாதம் இந்த மார்கழி மாதம்...
பீடை மாதம் அல்ல மார்கழி
பீடு (உன்னத) மாதம்....
திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி வருவதும் மார்கழியில்.....
சிவனுக்கு ஆரூத்ரா வருவதும் மார்கழியிலே....
திருப்பாவையும், திருவெண்பாவையும் பாடப்படுவதும் மார்கழியிலே....
ஆயர்பாடியில்
கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக்கி
மழையிலிருந்து
மக்களை காத்ததும் மார்கழியிலே....
மொத்தத்தில் மார்கழி மாதம்
முழுவதும் பக்தி பரவசம் தான்..
பக்தி பரவசத்தில்
திலைப்போம்
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்வோம்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
இட்லி மாதிரி.. குழியில் விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும்!
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி...தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழை உலகளாவிய அளவுக்கு வளர்த்த மாபெரும் அறிஞர்!
ஒன்றாய் நிற்கும் ஒளி!
{{comments.comment}}