- கலைவாணி ராமு
கஷ்டங்களை
கழி
இன்னல்களை
கழி
பழையன
கழி
மனதை தெய்வீகமாக்க
உணர்வை
உன்னதனமாக்க
வீதிகளில்
வண்ண கலர் கோலம்...
மனதில் பக்தி
திருக்கோலம்
சூடி கொடுத்த
சுடர் கொடியாளை
கொண்டாடும்
மாதம்..

கள்ளன்
கண்னனை
மலர் மாலையால் கோதை மயக்கிய
மாதம்...
துளசி வாசம் வீசும் மாதம்..
சுந்தர வடிவில்
விடியும் தினமும் காலை பொழுது....
முற்றத்தில் தீப ஔி...
மொத்தத்தில் இம்மாதம் மங்கள கரமான
மாதம்.....
தேவர்களின் மாதம் இந்த மார்கழி மாதம்...
பீடை மாதம் அல்ல மார்கழி
பீடு (உன்னத) மாதம்....
திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி வருவதும் மார்கழியில்.....
சிவனுக்கு ஆரூத்ரா வருவதும் மார்கழியிலே....
திருப்பாவையும், திருவெண்பாவையும் பாடப்படுவதும் மார்கழியிலே....
ஆயர்பாடியில்
கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக்கி
மழையிலிருந்து
மக்களை காத்ததும் மார்கழியிலே....
மொத்தத்தில் மார்கழி மாதம்
முழுவதும் பக்தி பரவசம் தான்..
பக்தி பரவசத்தில்
திலைப்போம்
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்வோம்
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}