- கலைவாணி ராமு
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....
வண்ண வண்ண விளக்குகள்.....
வகை வகையான விளக்குகள்....
கண்னை கவரும் விளக்குகள்....
கார்த்திகை தீப விளக்குகள்...
வினாயகர் விளக்கில்
முழு முதல்வனை வரவேற்று....
அஷ்டலட்சுமி விளக்கில்
லட்சுமியை அழைத்து....
முற்றத்தில் மாக்கோலம்
கலர் கோலம் போட்டு.....

தீப ஔியில்
மின்னும் வீடுகள்....
விளக்கேத்தும்
பாவையர்களின்
விளக்கின் ஔிக்கு நிகராகும்....
குயவர்களின் கைவண்ணம்
விளக்குகளின்
வடிவத்தில் பிரதிபலிக்கும்.....
பனம்பூவை சுட்டு ..
தூளாக்கி கட்டி...
கார்த்தி சுற்றும் அழகோ அழகு தான்....
அதில் விழும்
தீபாபொறி நம்
மனங்களில்
மத்தாப்பாய் சிரிக்கும்....
கார்த்திகை
மாதம் வந்தாலே
எங்கும் பக்தி பரவசமே....
தீபத் திருநாளில்
இருளை அகற்றி மின்னும் பூவுலகம்......
விண்ணுலகத்திற்க்கு
நிகராக மின்னும் அனைவரின் வீடுகளிள் ஔிரும் தீபம்!
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}