- கலைவாணி ராமு
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....
வண்ண வண்ண விளக்குகள்.....
வகை வகையான விளக்குகள்....
கண்னை கவரும் விளக்குகள்....
கார்த்திகை தீப விளக்குகள்...
வினாயகர் விளக்கில்
முழு முதல்வனை வரவேற்று....
அஷ்டலட்சுமி விளக்கில்
லட்சுமியை அழைத்து....
முற்றத்தில் மாக்கோலம்
கலர் கோலம் போட்டு.....

தீப ஔியில்
மின்னும் வீடுகள்....
விளக்கேத்தும்
பாவையர்களின்
விளக்கின் ஔிக்கு நிகராகும்....
குயவர்களின் கைவண்ணம்
விளக்குகளின்
வடிவத்தில் பிரதிபலிக்கும்.....
பனம்பூவை சுட்டு ..
தூளாக்கி கட்டி...
கார்த்தி சுற்றும் அழகோ அழகு தான்....
அதில் விழும்
தீபாபொறி நம்
மனங்களில்
மத்தாப்பாய் சிரிக்கும்....
கார்த்திகை
மாதம் வந்தாலே
எங்கும் பக்தி பரவசமே....
தீபத் திருநாளில்
இருளை அகற்றி மின்னும் பூவுலகம்......
விண்ணுலகத்திற்க்கு
நிகராக மின்னும் அனைவரின் வீடுகளிள் ஔிரும் தீபம்!
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?
{{comments.comment}}