சென்னை: கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆழமான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
ஒரு குழு கரூரில் விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்றொரு குழு பனையூரில் விசாரணை நடத்தி வருகிறது. பரப்புரை வாகனத்தை ஆய்வு செய்து அதில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}