அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அறிவிப்பு..திரும்பப் பெறுக..குடியரசுத் தலைவருக்கு சுவெங்கடேசன் கடிதம்

Jun 04, 2025,05:28 PM IST

மதுரை: அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.


அரசுத் துறைகளில் தணிக்கை மேற்கொள்வதற்காக சிஏஜி சார்பில் தனியார் சி.ஏ. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் அனுப்பி உள்ள கடிதத்தில்,


அண்மையில் சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம்.


இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர். நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சி. ஏ) செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜியின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.




அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.


இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு.


சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது.


எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி .ஏ நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெங்களூரு சம்பவம்: கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட்.. வழக்கு சிஐடி.,க்கு மாற்றம்

news

இதைச் செய்தால்தான் சமரசம்.. டாக்டர் ராமதாஸ் போட்ட 3 கன்டிஷன்.. ஏற்பாரா அன்புமணி ராமதாஸ்?

news

அதிரடி எம்.பி. மஹுவா மொய்த்ரா திடீர் திருமணம்.. முன்னாள் பிஜேடி எம்.பியை ரகசியமாக மணந்தார்!

news

விஜய்நிகழ்ச்சியில் பங்கேற்கும்.. பெண்குழந்தைகளை பெற்றவர்கள் முட்டாள்கள்.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு

news

குதிரை உதாரணம் ஏன்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்.. ஆடி போயிருக்கும் காங்கிரஸ் சீனியர்கள்!

news

இது எல்லா இடங்களிலும் நடப்பது தான்... பெங்களூரு சம்பவம் பற்றி சித்தராமைய்யா கருத்து

news

Thuglife Review: கமல்ஹாசன் -சிம்புவின் தக் லைஃப் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா?

news

ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை... நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!

news

மகளுடன் சென்று அப்பா ராமதாசை சந்தித்த அன்புமணி.. 45 minutes.. தைலாபுரத்தில் நடந்தது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்