- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 14 :
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பொருள் :
ஆண்கள் காதுகளில் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் பட்டு ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் அணிந்திருந்த மலர்களின் வாசனையை தேடி வண்டுகள் வந்து ஆடிக் கொண்டிருக்கின்றன. வேதமாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிற சிவ பெருமானின் பெயரை சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தரும் அந்த சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் சொல்லி பாடிடுங்கள். அவனது மார்பில் தவந்து ஆடும் கொன்றை மாலையின் மகிமை போற்றி பாடுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழை பாடிடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை பிரிக்கும் பரம்பொருளாகிய வளையல்கள் அணிந்த தாயை விட தாராள குணம் கொண்ட அந்த சிவனின் பாதமலர்களை பாடி நீராடி, பிறவி பெருங்கடலில் இருந்து விடுபடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
{{comments.comment}}