- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 14 :
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள் :
ஆண்கள் காதுகளில் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் பட்டு ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் அணிந்திருந்த மலர்களின் வாசனையை தேடி வண்டுகள் வந்து ஆடிக் கொண்டிருக்கின்றன. வேதமாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிற சிவ பெருமானின் பெயரை சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தரும் அந்த சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் சொல்லி பாடிடுங்கள். அவனது மார்பில் தவந்து ஆடும் கொன்றை மாலையின் மகிமை போற்றி பாடுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழை பாடிடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை பிரிக்கும் பரம்பொருளாகிய வளையல்கள் அணிந்த தாயை விட தாராள குணம் கொண்ட அந்த சிவனின் பாதமலர்களை பாடி நீராடி, பிறவி பெருங்கடலில் இருந்து விடுபடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}