- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 14 :
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள் :
ஆண்கள் காதுகளில் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் பட்டு ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் அணிந்திருந்த மலர்களின் வாசனையை தேடி வண்டுகள் வந்து ஆடிக் கொண்டிருக்கின்றன. வேதமாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிற சிவ பெருமானின் பெயரை சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தரும் அந்த சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் சொல்லி பாடிடுங்கள். அவனது மார்பில் தவந்து ஆடும் கொன்றை மாலையின் மகிமை போற்றி பாடுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழை பாடிடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை பிரிக்கும் பரம்பொருளாகிய வளையல்கள் அணிந்த தாயை விட தாராள குணம் கொண்ட அந்த சிவனின் பாதமலர்களை பாடி நீராடி, பிறவி பெருங்கடலில் இருந்து விடுபடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்
Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!
Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்
Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!
பழ மொழிகள்.. பெண்ணின் வாழ்வு என்பது கணவனின் அன்பே!
இவள் தானே நம் தேவதை!
உச்சத்தின் எச்சம்!
{{comments.comment}}