மார்கழி 14 திருவெம்பாவை பாசுரம் 14 .. காதார் குழையாடப் பைம்பூண் கலனாட!

Dec 28, 2024,04:52 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை 14 :


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.




பொருள் :


ஆண்கள் காதுகளில் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் பட்டு ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் அணிந்திருந்த மலர்களின் வாசனையை தேடி வண்டுகள் வந்து ஆடிக் கொண்டிருக்கின்றன. வேதமாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிற சிவ பெருமானின் பெயரை சொல்லி நீராடுங்கள்.


ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தரும் அந்த சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் சொல்லி பாடிடுங்கள். அவனது மார்பில் தவந்து ஆடும் கொன்றை மாலையின் மகிமை போற்றி பாடுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழை பாடிடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை பிரிக்கும் பரம்பொருளாகிய வளையல்கள் அணிந்த தாயை விட தாராள குணம் கொண்ட அந்த சிவனின் பாதமலர்களை பாடி நீராடி, பிறவி பெருங்கடலில் இருந்து விடுபடுங்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்