சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (Assured Pension Scheme) ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பால் லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதல்வர் முன்னிலையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், ஓய்வூதிய நிதியைப் பலப்படுத்தவும் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ. 11,000 கோடி தனது பங்களிப்பாக வழங்க உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாகப் புதிய மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இனிப்புகள் வழங்கித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய விவகாரத்தில், தமிழக அரசு எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது, அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஊழியர்களின்தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது, அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு நிலையான பாதுகாப்பை வழங்கும். ஆண்டுக்கு ரூ. 11,000 கோடி நிதி ஒதுக்கீடு என்பது மாநில அரசின் நிதிநிலையில் ஊழியர் நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்தத் திட்டம் குறித்த மேலதிக விவரங்கள் மற்றும் விதிமுறைகள் விரைவில் அந்தந்தத் துறை ரீதியாக ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
யாசகத்தோழி!
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
பூமி தினம்
World Earthday.. பூமியைக் கொண்டாடுவோம்.. பாதுகாப்பாக காத்திருப்போம்!
{{comments.comment}}