- ஸ்வர்ணலட்சுமி
ஆகஸ்ட் முதல் நாள்: விசுவாசி வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் முதல் தேதி ஆன இன்று மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையும் வளர்பிறை அஷ்டமி திதியும் அமைந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தியை பல்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வார்கள் .மூன்றாம் ஆடி வெள்ளி ஆன இன்று அனைத்து மாரியம்மன், காளியம்மன் , சவுண்டம்மன் கோவில்களில் அபிஷேகங்கள் , அலங்காரம், பூஜைகள் என என விசேஷமாக நடைபெறுகின்றன.
பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு இணங்க ராகி மாவினால் கூழ் செய்து மோர் கலந்து நைவேத்தியமாக படைத்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மாரியம்மன் கோவில்களில் பிரசித்தமாக நடைபெறும் வழக்கமாகும்.
சேலத்தில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் பண்டிகை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆடி மாதத்தில் ஊரே திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.
ஆடி மாதம் நீர் தேவதைகளை வணங்குவதற்கு ஏற்ற காலம் .இம்மாதத்தில் சக்தி தேவியின் சக்தி அதிகரித்து இருக்கும் . மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தைரியம் மற்றும் அதீத சக்தியின் தெய்வமான காளிகாம்பாள் தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அம்மனுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் ,பருப்பு சாதம், எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம், அக்காரவடிசல் போன்ற அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப பிரசாதமாக செய்து படையல் இட்டு பெண்கள் விரதம் இருந்து வழிபடுவர்.
பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை ,மகிழ்ச்சி, ஆரோக்கியம் ,செல்வ செழிப்பு ,வாழ்க்கை தரம் மேலோங்கும் .இம்மாதம் கோமாதா வழிபாடு செய்வது அவற்றுக்கு தீவனம் கொடுப்பது அதீத நன்மை பயக்கும். லட்சுமியின் அம்சம் பொருந்திய நாளான வளர்பிறை ஆடி வெள்ளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் சிறப்பு .இதனால் கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும்.
வீடுகளில் பூஜை அறையில் அம்மன் படமோ அல்லது உருவச்சலையோ இருந்தால் அலங்கரித்து சிகப்பு மலர்கள் வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் இட்டு ,வெற்றிலை, பாக்கு ,பழம் ,வைத்து அவரவர் நிலைமைக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து, தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.
மேலும் மங்களகரமான பொருட்கள் இன்று வாங்குவது சிறப்பு .பூஜை பொருட்கள், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு வாங்குவது சிறப்பானதாகும். பெண்கள் அபிராமி அந்தாதி ,லலிதா சகஸ்ரநாமம் படிப்பது குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?
காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?
{{comments.comment}}