மூன்றாம் ஆடி வெள்ளி.. வளர்பிறை அஷ்டமி.. ஆகஸ்ட் முதல் நாளே சிறப்பு .. மிக சிறப்பு!

Aug 01, 2025,12:23 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆகஸ்ட் முதல் நாள்: விசுவாசி வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் முதல் தேதி ஆன இன்று மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையும்  வளர்பிறை அஷ்டமி திதியும் அமைந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும்.


ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தியை பல்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வார்கள் .மூன்றாம் ஆடி வெள்ளி ஆன இன்று  அனைத்து மாரியம்மன், காளியம்மன் , சவுண்டம்மன் கோவில்களில் அபிஷேகங்கள் , அலங்காரம், பூஜைகள் என என விசேஷமாக நடைபெறுகின்றன.


பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு இணங்க ராகி மாவினால் கூழ் செய்து மோர் கலந்து நைவேத்தியமாக படைத்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மாரியம்மன் கோவில்களில்  பிரசித்தமாக  நடைபெறும் வழக்கமாகும்.




சேலத்தில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் பண்டிகை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆடி மாதத்தில் ஊரே திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.


ஆடி மாதம் நீர்  தேவதைகளை வணங்குவதற்கு ஏற்ற காலம் .இம்மாதத்தில் சக்தி தேவியின் சக்தி அதிகரித்து இருக்கும் . மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தைரியம் மற்றும் அதீத சக்தியின் தெய்வமான காளிகாம்பாள் தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.


அம்மனுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் ,பருப்பு சாதம், எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம், அக்காரவடிசல் போன்ற அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப பிரசாதமாக செய்து படையல் இட்டு பெண்கள் விரதம் இருந்து வழிபடுவர். 


பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை ,மகிழ்ச்சி, ஆரோக்கியம் ,செல்வ செழிப்பு ,வாழ்க்கை தரம் மேலோங்கும் .இம்மாதம் கோமாதா வழிபாடு செய்வது அவற்றுக்கு தீவனம் கொடுப்பது அதீத நன்மை பயக்கும். லட்சுமியின் அம்சம் பொருந்திய நாளான வளர்பிறை ஆடி வெள்ளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் சிறப்பு .இதனால் கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும்.


வீடுகளில் பூஜை அறையில் அம்மன் படமோ அல்லது உருவச்சலையோ இருந்தால் அலங்கரித்து சிகப்பு மலர்கள் வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் இட்டு ,வெற்றிலை, பாக்கு ,பழம் ,வைத்து அவரவர் நிலைமைக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து, தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.


மேலும் மங்களகரமான பொருட்கள் இன்று வாங்குவது சிறப்பு .பூஜை பொருட்கள், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு வாங்குவது சிறப்பானதாகும். பெண்கள் அபிராமி அந்தாதி ,லலிதா சகஸ்ரநாமம் படிப்பது குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Women's world cup Finals: ஷெபாலி அதிவேகம்.. தீப்தி சரவெடி.. ரிச்சாவின் மின்னலாட்டம்.. இந்தியா 298!

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்