கள்ளக்குறிச்சி: உங்கள் சிந்தனையைச் சற்று மாற்றுங்கள். ஒரே ஒருமுறை ஆட்சியை என்னிடம் கொடுத்துத்தான் பாருங்களேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், உங்க சிந்தனைய கொஞ்சம் மாத்துங்களேன். ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன். நல்ல கல்வி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாக தருகிறேன். நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன். அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையை தருகிறேன்.

கடந்த பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் மக்கள் எதிர்பார்த்த அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. வாக்காளர்களாகிய நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகச் சிந்திப்பதால்தான் அதே போன்ற ஆட்சிகள் அமைகின்றன. இந்த முறை உங்கள் சிந்தனையைச் சற்று மாற்றிச் சிந்தித்து பாருங்கள். ஆட்சி அதிகாரம் என்பது எங்களிடம் ஒருமுறை வந்து சேரட்டும். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு முடிவு செய்யுங்கள். ஒரே ஒருமுறை எங்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்துப் பாருங்களேன்.
கொள்கையை முன்னிறுத்தி நீண்ட காலமாக அரசியல் செய்து வருகிறது. யாரு கையில் ஆட்சி இருந்தால் நல்லது என்று யோசித்து பாருங்கள். இலவசம் கொடுத்து ஏமாற்றுபவர்களிடம் ஆட்சியை கொடுக்காமல், ஒரு முறை மாற்றி யோசித்து உங்கள் மகனிடம் ஆட்சியை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு
Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!
traditional maavadu receipe பாட்டி ஸ்டைல் பாரம்பரிய மாவடு எப்படி போடுவது?
அயோத்தியின் நாயகனே .. அழகனே.. ஆன்மீக அழகனே ராமா!
மனிதனை மிஞ்சுமா இயந்திரம்? AGI மற்றும் அதற்கு அப்பால் .. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (8)
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
குழந்தை கிறுக்கிக் கொண்டே இருக்கிறது.. கவலை வேண்டாம்.. நீங்க என்ன சொல்றீங்க? புரியலையே?!
{{comments.comment}}