விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

Jan 27, 2026,05:47 PM IST

மதுரை: அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன நிலைப்பாடு என எனக்குப் புரியவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், செங்கோட்டையன் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். நான் தவெக கூட்டணிக்கு வர வேண்டுமென்று அவர் விரும்பினார். கூட்டணிக்கு வருவேன் என நம்பினார். அவர் சொல்வதுபோல, சூழ்நிலை காரணமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லவில்லை. நானாக முடிவு எடுத்து தான் சென்றேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.




அரசியல் என்பது சதி நிறைந்த துறை. நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத் தான் அதிமுக கூட்டணிக்கு சென்றேன். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 


அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன நிலைப்பாடு என எனக்குப் புரியவில்லை. அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுகவினர் அழைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்குச் சென்றேன். எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்