தேனி: தொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்து வரும் காரணத்தினால் வைகையின் நீர்மட்டம் தற்போது விறுவிறு என உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 68.50 அடியை எட்டியுள்ளது. இந்த அணை கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ. குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 69 அடியை எட்டும் போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையின் நீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து 1,594 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 769 கன அடியாகவும் உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக தற்போது உள்ளது. தேனி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
பாரதீதீ..!
{{comments.comment}}