சென்னை: மென்மையை தேடி பயணிக்கும் பெண்களின் மனதிற்கு பிடித்தவாறு டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்தும் கரடி பொம்மைகள் தினம் இன்று.
காதலர் தின கொண்டாட்டத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இது காதல் வாரக் கொண்டாட்டத்தில் நான்காவது நாளாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று டெடி தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், காதலன் மட்டுமல்லாமல் அக்கா தம்பி, அண்ணன் தங்கை, கணவன் மனைவி என தனக்கு பிடித்தமான அன்பானவர்களுக்கு டெடி பியர்களை பரிசாக வழங்குகிறார்கள்.
குறிப்பாக காதலன் காதலிக்கு கொடுக்கக்கூடிய அன்பு, அரவணைப்பு, ஆறுதல், என்பதை குறிக்கும் விதமாக டெடி பொம்மைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் வசீகரிக்கும் அழகுடன் கூடிய டெடி பொம்மைகளின் பொசு பொசுப்பு தன்மை, மென்மையான மேனி, அதன் அரைவணைப்பு போன்ற காரணங்களால் காதலர்கள் காதலிக்கு பிடித்தமான டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

டெடி பொம்மைகளை பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் டெடிபியர்களை கட்டிப்பிடித்து தூங்குவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் தாயைப் போன்ற மெதுவான அரவணைப்பு டெடி பொம்மைகளிடம் கிடைக்கிறது. இதனால் தங்களின் அன்பானவர்கள் அருகில் இல்லை என்றால் கூட அந்த ஏக்கத்தை போக்கும் விதமாக டெடி பொம்மைகளின் தோற்றமும் அழகும் துணையாக இருக்கும். இது அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.இதனால் காதலனுக்கு நிகரான அரவணைப்பை பெண்கள் டெடி பொம்மைகளிடம் உணர்கின்றனர்.
அப்புறம் என்ன காதலர்களே.. உற்ற தோழனாக, சகோதரனாக, கணவனாக காதலனாக, அம்மாவாக, நினைக்கும் டெடி பொம்மைகளை காதலிகளுக்கு கிஃப்டாக கொடுத்து அவர்களை இம்பிரஸ் செய்யுங்க..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}