- பா. பானுமதி
பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது பேருந்தில் விஷாலுக்கு மட்டுமே அமர இடம் கிடைத்தது. விஷால் அம்மாவுக்கு இடம் கிடைக்காமல் சற்று தள்ளி ஒரு இடம் இருந்தால் அங்கு சென்று அமர்ந்து கொண்டார். இறங்கும்போது சேர்ந்து இறங்கி விடலாம் என்று நினைத்திருந்தார்.
பேருந்து நிலையம் சென்றதும் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷால் அம்மா இறங்குவதற்கு முன் விஷால் கீழே இறங்கி விட்டான். வேகமாக இறங்கி கீழே பார்த்தால் பிள்ளையை காணவில்லை.
போச்சுடா என்ற தலையில் கை வைத்து நாலாபுறமும் விஷாலை தேடினார்கள். உடனிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையாக விஷாலை தேடிக் கொண்டிருந்தனர்.
எங்கும் விஷாலை காணவில்லை. பள்ளிப் பிள்ளைகள் கல்லூரி பிள்ளைகள் என அனைவரும் விசாலை தேடினர்.

அங்கு ஒரு காவலர் நின்று கொண்டிருக்க அவரிடம் சென்று விவரம் கூறினார்கள் .அவர் நிறைய வினாக்களை வரிசையாக கேட்டார். ஒரு நிமிடம் கொசவபட்டி பேருந்து சென்றுவிடும், அதில் என் தலைமையாசிரியர் இருக்கிறார். அவரிடம் விவரத்தை கூறிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு விஷாலின் அம்மா அந்த பேருந்தை நோக்கி சென்றார் .
அங்கு கண்ட காட்சி கண்களால் நம்ப முடியவில்லை. விஷால் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு பக்கத்தில் ஒரு இடம் பிடித்து வைத்திருந்தான். மகிழ்ச்சியுடன் சென்று காவலரிடம் விவரம் கூறினார் அவன் அம்மா. தான் ஏற வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று விவரமாக தெரிந்து கொண்டு பேருந்து விட்டு இறங்கியதும் அம்மாவை எதிர்பார்க்காமல் நேராக சென்று அந்த பேருந்தில் அமர்ந்து கொண்டான் விஷால். அத்தோடு நில்லாமல் அம்மாவுக்கும் இடம் பிடித்து வைத்திருந்தான்!
காவலர் வந்தவுடன் அவரிடம் விவரம் சொன்னேன் "ஏம்மா உன் புள்ள நல்லா விவரமா சமத்தா இருக்கான் நீ தான் இப்படி அவசரப்பட்டு அனைவரையும் கலவரப்படுத்துவதா" என்று சாடினார்.
அதன்பின் விஷால் அம்மா கவலைப்படவில்லை. பிள்ளை கிடைத்த மகிழ்ச்சியில் அவன் விவரமானவன் என்று காவலர் புகழ புன்னகைத்த வண்ணம் வண்டியில் ஏற வண்டி கிளம்பியது
தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}