- பா. பானுமதி
பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது பேருந்தில் விஷாலுக்கு மட்டுமே அமர இடம் கிடைத்தது. விஷால் அம்மாவுக்கு இடம் கிடைக்காமல் சற்று தள்ளி ஒரு இடம் இருந்தால் அங்கு சென்று அமர்ந்து கொண்டார். இறங்கும்போது சேர்ந்து இறங்கி விடலாம் என்று நினைத்திருந்தார்.
பேருந்து நிலையம் சென்றதும் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷால் அம்மா இறங்குவதற்கு முன் விஷால் கீழே இறங்கி விட்டான். வேகமாக இறங்கி கீழே பார்த்தால் பிள்ளையை காணவில்லை.
போச்சுடா என்ற தலையில் கை வைத்து நாலாபுறமும் விஷாலை தேடினார்கள். உடனிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையாக விஷாலை தேடிக் கொண்டிருந்தனர்.
எங்கும் விஷாலை காணவில்லை. பள்ளிப் பிள்ளைகள் கல்லூரி பிள்ளைகள் என அனைவரும் விசாலை தேடினர்.

அங்கு ஒரு காவலர் நின்று கொண்டிருக்க அவரிடம் சென்று விவரம் கூறினார்கள் .அவர் நிறைய வினாக்களை வரிசையாக கேட்டார். ஒரு நிமிடம் கொசவபட்டி பேருந்து சென்றுவிடும், அதில் என் தலைமையாசிரியர் இருக்கிறார். அவரிடம் விவரத்தை கூறிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு விஷாலின் அம்மா அந்த பேருந்தை நோக்கி சென்றார் .
அங்கு கண்ட காட்சி கண்களால் நம்ப முடியவில்லை. விஷால் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு பக்கத்தில் ஒரு இடம் பிடித்து வைத்திருந்தான். மகிழ்ச்சியுடன் சென்று காவலரிடம் விவரம் கூறினார் அவன் அம்மா. தான் ஏற வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று விவரமாக தெரிந்து கொண்டு பேருந்து விட்டு இறங்கியதும் அம்மாவை எதிர்பார்க்காமல் நேராக சென்று அந்த பேருந்தில் அமர்ந்து கொண்டான் விஷால். அத்தோடு நில்லாமல் அம்மாவுக்கும் இடம் பிடித்து வைத்திருந்தான்!
காவலர் வந்தவுடன் அவரிடம் விவரம் சொன்னேன் "ஏம்மா உன் புள்ள நல்லா விவரமா சமத்தா இருக்கான் நீ தான் இப்படி அவசரப்பட்டு அனைவரையும் கலவரப்படுத்துவதா" என்று சாடினார்.
அதன்பின் விஷால் அம்மா கவலைப்படவில்லை. பிள்ளை கிடைத்த மகிழ்ச்சியில் அவன் விவரமானவன் என்று காவலர் புகழ புன்னகைத்த வண்ணம் வண்டியில் ஏற வண்டி கிளம்பியது
தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
படிப்போம்.. பண்படுவோம்.. பயனுற வாழ்ந்திடுவோம்!
காணாமல் போன விஷாலும் காவலர் பேச்சும்.. விஷாலின் விளையாட்டுகள் (13)
Madurai Meenakshi: மாணிக்க மூக்குத்தி.. மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!
{{comments.comment}}