- ப ந ராஜேஷ் கண்ணா
எதை எழுதலாம் என்று எத்தனிக்கும் பொழுது
இதை எழுதலாமா அல்லது அதை எழுதலாமா?
இதை எழுதினால் ஏதாவது பிரச்சினை வருமா?
அதை எழுதினால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?
நாட்டு நடப்பு எழுதலாமா?
நாம் நினைத்ததை எழுதலாமா?
வீட்டுக் குறிப்புகள் எழுதலாமா?
துணுக்குகள் எழுதலாமா?
கவிதைகள் எழுதலாமா?
கதைகள் எழுதலாமா?
விவாதங்கள் எழுதலாமா? விசாரணைகள் எழுதலாமா?

வர்ணனையாக எழுதலாமா?வஞ்சனையாக எழுதலாமா?
யதார்த்தமாக எழுதலாமா? கலப்புகளோடு எழுதலாமா?
உண்மையை எழுதலாமா?
பொய்யை எழுதலாமா?
அலசி ஆராய்ந்து எழுதலாமா? குழப்பமாக எழுதலாமா?
சமையல் குறிப்புகளை எழுதலாமா? கொண்ட சுவைகளை எழுதலாமா?
உறவு முறைகளை எழுதலாமா? விருந்தோம்பலை எழுதலாமா?
மொழியை எழுதலாமா?
கணிதத்தை எழுதலாமா?
அறிவியலை எழுதலாமா?
சமூக அறிவியலை எழுதலாமா?
குற்றத்தை எழுதலாமா?
குற்றம் புரிந்தவரை எழுதலாமா?
குற்றத்தை விசாரித்தவரை எழுதலாமா?
சாட்சியை எழுதலாமா?
அழுபவரை எழுதலாமா? சிரிப்பவரை எழுதலாமா?
குழப்பத்தில் இருப்பவர்களை எழுதலாமா?
பிரச்சனைகளில் ஆழ்ந்தவரை எழுதலாமா?
குடும்பத்தை பற்றி எழுதலாமா?
கூட்டுக் குடும்பத்தை பற்றி எழுதலாமா?
இவ்வளவு எழுதலாமா-க்களுக்கிடையே
இதையாவது எழுத முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு
சிலாகித்து போனேன்!
(ப ந ராஜேஷ் கண்ணா, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூ,ர் திருவள்ளூர் மாவட்டம்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}