- ப ந ராஜேஷ் கண்ணா
எதை எழுதலாம் என்று எத்தனிக்கும் பொழுது
இதை எழுதலாமா அல்லது அதை எழுதலாமா?
இதை எழுதினால் ஏதாவது பிரச்சினை வருமா?
அதை எழுதினால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?
நாட்டு நடப்பு எழுதலாமா?
நாம் நினைத்ததை எழுதலாமா?
வீட்டுக் குறிப்புகள் எழுதலாமா?
துணுக்குகள் எழுதலாமா?
கவிதைகள் எழுதலாமா?
கதைகள் எழுதலாமா?
விவாதங்கள் எழுதலாமா? விசாரணைகள் எழுதலாமா?

வர்ணனையாக எழுதலாமா?வஞ்சனையாக எழுதலாமா?
யதார்த்தமாக எழுதலாமா? கலப்புகளோடு எழுதலாமா?
உண்மையை எழுதலாமா?
பொய்யை எழுதலாமா?
அலசி ஆராய்ந்து எழுதலாமா? குழப்பமாக எழுதலாமா?
சமையல் குறிப்புகளை எழுதலாமா? கொண்ட சுவைகளை எழுதலாமா?
உறவு முறைகளை எழுதலாமா? விருந்தோம்பலை எழுதலாமா?
மொழியை எழுதலாமா?
கணிதத்தை எழுதலாமா?
அறிவியலை எழுதலாமா?
சமூக அறிவியலை எழுதலாமா?
குற்றத்தை எழுதலாமா?
குற்றம் புரிந்தவரை எழுதலாமா?
குற்றத்தை விசாரித்தவரை எழுதலாமா?
சாட்சியை எழுதலாமா?
அழுபவரை எழுதலாமா? சிரிப்பவரை எழுதலாமா?
குழப்பத்தில் இருப்பவர்களை எழுதலாமா?
பிரச்சனைகளில் ஆழ்ந்தவரை எழுதலாமா?
குடும்பத்தை பற்றி எழுதலாமா?
கூட்டுக் குடும்பத்தை பற்றி எழுதலாமா?
இவ்வளவு எழுதலாமா-க்களுக்கிடையே
இதையாவது எழுத முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு
சிலாகித்து போனேன்!
(ப ந ராஜேஷ் கண்ணா, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூ,ர் திருவள்ளூர் மாவட்டம்)
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்
விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
{{comments.comment}}