- ப ந ராஜேஷ் கண்ணா
எதை எழுதலாம் என்று எத்தனிக்கும் பொழுது
இதை எழுதலாமா அல்லது அதை எழுதலாமா?
இதை எழுதினால் ஏதாவது பிரச்சினை வருமா?
அதை எழுதினால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?
நாட்டு நடப்பு எழுதலாமா?
நாம் நினைத்ததை எழுதலாமா?
வீட்டுக் குறிப்புகள் எழுதலாமா?
துணுக்குகள் எழுதலாமா?
கவிதைகள் எழுதலாமா?
கதைகள் எழுதலாமா?
விவாதங்கள் எழுதலாமா? விசாரணைகள் எழுதலாமா?

வர்ணனையாக எழுதலாமா?வஞ்சனையாக எழுதலாமா?
யதார்த்தமாக எழுதலாமா? கலப்புகளோடு எழுதலாமா?
உண்மையை எழுதலாமா?
பொய்யை எழுதலாமா?
அலசி ஆராய்ந்து எழுதலாமா? குழப்பமாக எழுதலாமா?
சமையல் குறிப்புகளை எழுதலாமா? கொண்ட சுவைகளை எழுதலாமா?
உறவு முறைகளை எழுதலாமா? விருந்தோம்பலை எழுதலாமா?
மொழியை எழுதலாமா?
கணிதத்தை எழுதலாமா?
அறிவியலை எழுதலாமா?
சமூக அறிவியலை எழுதலாமா?
குற்றத்தை எழுதலாமா?
குற்றம் புரிந்தவரை எழுதலாமா?
குற்றத்தை விசாரித்தவரை எழுதலாமா?
சாட்சியை எழுதலாமா?
அழுபவரை எழுதலாமா? சிரிப்பவரை எழுதலாமா?
குழப்பத்தில் இருப்பவர்களை எழுதலாமா?
பிரச்சனைகளில் ஆழ்ந்தவரை எழுதலாமா?
குடும்பத்தை பற்றி எழுதலாமா?
கூட்டுக் குடும்பத்தை பற்றி எழுதலாமா?
இவ்வளவு எழுதலாமா-க்களுக்கிடையே
இதையாவது எழுத முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு
சிலாகித்து போனேன்!
(ப ந ராஜேஷ் கண்ணா, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூ,ர் திருவள்ளூர் மாவட்டம்)
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}