- ப ந ராஜேஷ் கண்ணா
எதை எழுதலாம் என்று எத்தனிக்கும் பொழுது
இதை எழுதலாமா அல்லது அதை எழுதலாமா?
இதை எழுதினால் ஏதாவது பிரச்சினை வருமா?
அதை எழுதினால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?
நாட்டு நடப்பு எழுதலாமா?
நாம் நினைத்ததை எழுதலாமா?
வீட்டுக் குறிப்புகள் எழுதலாமா?
துணுக்குகள் எழுதலாமா?
கவிதைகள் எழுதலாமா?
கதைகள் எழுதலாமா?
விவாதங்கள் எழுதலாமா? விசாரணைகள் எழுதலாமா?

வர்ணனையாக எழுதலாமா?வஞ்சனையாக எழுதலாமா?
யதார்த்தமாக எழுதலாமா? கலப்புகளோடு எழுதலாமா?
உண்மையை எழுதலாமா?
பொய்யை எழுதலாமா?
அலசி ஆராய்ந்து எழுதலாமா? குழப்பமாக எழுதலாமா?
சமையல் குறிப்புகளை எழுதலாமா? கொண்ட சுவைகளை எழுதலாமா?
உறவு முறைகளை எழுதலாமா? விருந்தோம்பலை எழுதலாமா?
மொழியை எழுதலாமா?
கணிதத்தை எழுதலாமா?
அறிவியலை எழுதலாமா?
சமூக அறிவியலை எழுதலாமா?
குற்றத்தை எழுதலாமா?
குற்றம் புரிந்தவரை எழுதலாமா?
குற்றத்தை விசாரித்தவரை எழுதலாமா?
சாட்சியை எழுதலாமா?
அழுபவரை எழுதலாமா? சிரிப்பவரை எழுதலாமா?
குழப்பத்தில் இருப்பவர்களை எழுதலாமா?
பிரச்சனைகளில் ஆழ்ந்தவரை எழுதலாமா?
குடும்பத்தை பற்றி எழுதலாமா?
கூட்டுக் குடும்பத்தை பற்றி எழுதலாமா?
இவ்வளவு எழுதலாமா-க்களுக்கிடையே
இதையாவது எழுத முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு
சிலாகித்து போனேன்!
(ப ந ராஜேஷ் கண்ணா, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூ,ர் திருவள்ளூர் மாவட்டம்)
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
2.5 கோடி ஆதார் எண்களை முடக்கியது மத்திய அரசு...காரணம் இது தானாம்
தேர்தல் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்
Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!
தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!
வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)
மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்
{{comments.comment}}