இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

May 13, 2026,02:42 PM IST

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து வாக்களித்தது அக்கட்சிக்குள் இருக்கும் பெரும் பிளவை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.


முதல்வர் விஜய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அக்கட்சியின் 47 எம்.எல்.ஏ-க்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர்.


எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து 22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதேசமயம், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதாவது எஸ்பி வேலுமணி தரப்பில்தான் அதிக அளவிலான அதிமுக எம்எல்ஏக்கல் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.


கொறடா உத்தரவை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு பெரிய குழு அரசுக்கு ஆதரவாக நின்றது அதிமுக தலைமையைத் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


துரோகம்... துரோகம்... பொங்கியெழுந்த ஈபிஎஸ்




இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். "இது அப்பட்டமான துரோகம். ஜெயலலிதா அவர்களின் புகழைச் சொல்லியும், இரட்டை இலை சின்னத்தில் நின்றும் வெற்றி பெற்றவர்கள் இன்று விசுவாசமின்றி செயல்பட்டுள்ளனர். கொறடா உத்தரவை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக தவெக அரசுக்கு அவர்கள் வாக்களித்துள்ளனர். அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவி போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி சிலர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்," என ஆவேசமாகத் தெரிவித்தார்.


மேலும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்வு முறையாக சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் தலைமையில் இந்த விதிமீறல் நடந்துள்ளது சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


அரசியல் பின்னணி


2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து அழுத்தங்களைச் சந்தித்து வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல்வர் விஜய் தரப்பு இந்த ஆதரவை ஒரு தார்மீக வெற்றியாகப் பார்க்கிறது. அதே சமயம், எஸ்பி வேலுமணி தரப்பின் இந்தத் திடீர் மூவ், கொங்கு மண்டல அரசியலில் அதிமுகவின் பிடியைத் தளர்த்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


அடுத்தகட்டமாக, கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரை அணுகத் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் வரும் நாட்கள் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உண்மையான அன்பு.. ஒரு நிமிடக் கதை (9)

news

பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்

news

இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்

news

ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!

news

ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி

news

திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!

news

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!

news

Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்