சென்னையில் மீண்டும் கன மழை.. பலத்த காற்றுடன் அடித்து விளாசியது!

Jun 22, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை வந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன்  மழை வெளுத்தெடுத்தது. இதேபோல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு  மழை வெளுத்துக் கட்டி சென்னையின் உஷ்ணத்தை உறிஞ்சிப் போட்டுச் சென்றது. இதனால் வெட்கை தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மழை நின்றதைத் தொடர்ந்து மீண்டும் வெயில் தலை காட்டியது.



காலையில் கூட சென்னையில் நன்றாக வெயில் அடித்தது. அடடா மறுபடியும் வெயிலா என்று மக்கள் மண்டை காய ஆரம்பித்த நிலையில் மாலையில் நிலைமை டக்கென தலைகீழாக மாறி மழையைக் கொண்டு வந்து மக்களின் மனதைக் குளிர வைத்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

news

திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

news

"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு

news

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

news

மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

news

மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்

news

இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு

news

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட இஸ்ரேல்.. பரபரப்புத் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்