சண்டிகர்: காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், ஹரியானாவில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி இணைந்து போட்டியிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இது பலன் தர வில்லை. ராகுல்காந்தி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு. இந்நிலையில் ஹரியானாவில் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலை பெரும் சூறாவளியாக வீசுகிறது. இதனை சாதகமாக்கி பாஜகவை காலி செய்து விட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. மெகா கூட்டணி உருவாகும் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தது. ராகுல்காந்தியின் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு ஆரம்பம் முதலே பிடி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் ராகுல்காந்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தலை தனித்து சந்திக்க காங்கிரஸும் தயாராக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}