சண்டிகர்: காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், ஹரியானாவில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி இணைந்து போட்டியிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இது பலன் தர வில்லை. ராகுல்காந்தி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு. இந்நிலையில் ஹரியானாவில் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலை பெரும் சூறாவளியாக வீசுகிறது. இதனை சாதகமாக்கி பாஜகவை காலி செய்து விட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. மெகா கூட்டணி உருவாகும் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தது. ராகுல்காந்தியின் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு ஆரம்பம் முதலே பிடி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் ராகுல்காந்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தலை தனித்து சந்திக்க காங்கிரஸும் தயாராக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}