வணங்கான் ஹேப்பி அண்ணாச்சி.. எனது ஏக்கத்தைத் தீர்த்த பாலா சாருக்கு நன்றிகள்.. அருண் விஜய் நெகிழ்ச்சி

Nov 18, 2024,02:42 PM IST

சென்னை:   நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் என்று இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 


பிதாமகன், நந்தா, சேது, நான் கடவுள், அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. தனக்கென்று தனியாக ஒரு பாணியை வகுத்தவர் இயக்குனர் பாலா. தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிப்பார் என்று பாலா அறிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.




அதன்பின்னர் இப்படத்தில் அருண் விஜய் முன்னணி கேரக்டரில் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று விரைவில் வெளியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் பாலாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வணங்கான் படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்த அருண் விஜய் னெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு,


நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.


நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. 

ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், 

என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.


எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!


இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்

திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 


மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்