ஹாங்ஷூ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 2வது தங்கப் பதக்கத்தை இன்று பிற்பகல் வென்றது.
இன்று காலையில்தான் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இந்த நிலையில் தற்போது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று அசத்தியது.
சீனாவின் ஹாங்ஷூ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் நாளில் இந்தியா 3 வெற்றி இரண்டு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை அள்ளியது. இன்று 2வது நாளில் 2 தங்கத்தை வென்று அசத்தியது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியாவின் திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் டோமர், ருத்ரகன்ஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது.
தங்கப் பதக்கம் மட்டும் இல்லாமல், உலக சாதனையையும் படைத்தது இந்தியக் குழு. அதாவது 1893.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முந்தைய. உலக சாதனை புள்ளிகள் 1893.3 ஆகும். இதை சீனா படைத்திருந்தது. தற்போது சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வைத்து சீனாவை முந்தியுள்ளது இந்தியா.
2வது தங்கம்
இந்த நிலையில் பிற்பகலில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்தது. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் இறுதிப் போட்டியில் மோதின. ஸ்மிருதி மந்தனா தலைமையில் ஆடிய இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.
முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.
கேப்டன் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இதுரை 11 பதக்கங்கள்
இன்றைய போட்டியில் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது இந்தியா. ஆடவர் நால்வர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் ஜஸ்வீந்தர், பீம், புனித், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் தற்போது 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதில் 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}