எது சுதந்திரம்?

Aug 15, 2026,02:14 PM IST

- பாரத்


தியாகிகளின் ரத்த யுத்த போர் முழக்கம் 

வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டது


காந்தி தியாகம் காகித தாளில் உருவம் பொறிக்கப்பட்டு 

கொள்ளையர்களிடம் குவியலாக பதுக்கப்பட்டது


பெண்களை சீண்டுபவனை சிறையில் அடைப்பது குற்றம்

சிரத்தைப் கொய்து எடுத்து தீயில் வாட்டுவதே புதிய மாற்றம் 


சாதி மதக் கலவரத்தை தூண்டுபவனை 

குற்றவாளி பட்டியலில் பெயரிடுவது என்ன உரிமை 




அவர்களை உரமிடா வனத்தில் உடல்களை உரமாகப் பயிரிடப்படுவதே பெருமை


லஞ்சமும் பஞ்சமும் தலைவிரித்து ஆடுவது பாரத தேசமா? 


கல்வியும் கடமையும் அரிதாரம் பூசி இருப்பது பணத்தின் தோற்றமா

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற தீண்டாமை போக்கனும் 

அதை இன்னும் கடைபிடிப்பவனை 

உடல்கூராய்வு செய்து இல்லாமையாக்க வேண்டும்.


ஏழைகள் இல்லா என்னாளே 

அன்றுதான்  இந்திய நாட்டின் சுதந்திரம்! 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்