சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியும் புண்ணியம் இல்லை.. பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 869 கோடி இழப்பு

Mar 17, 2025,04:58 PM IST

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 869 கோடி அளவுக்கு நஷ்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளதாம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தியது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்றெல்லாம் அது எதிர்பார்த்தது. பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் விட்டதாம்.


இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் பாகிஸ்தான் முதல் ஆளாக இந்தத் தொடரை விட்டு வெளியேறியதால் உள்ளூர் ரசிகர்கள் கடுப்பாகி சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காணவே ஆர்வம் காட்டவில்லை. இதனால் மிகப் பெரிய இழப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன




ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. வீரர்களுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கேப்டன் அடிக்கடி மாற்றப்படுகிறார். அணித் தேர்விலும் குழப்பம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும் குழப்பம், நிதியிருப்பும் கவலைக்குரியதாக உள்ளது. இப்படி பல சிக்கல்களில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபிக்காக அது நிறைய முதலீடு செய்திருந்தது. ஆனால் ரிட்டர்ன் படு மோசமாக இருந்ததால் நஷ்டம் எகிறி விட்டதாம்.


கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். நம்ம ஊருக் கணக்கில் பார்த்தால் இது ரூ. 869 கோடியாகும்.


சாம்பியன்ஸ் தொடரில் மொத்தமே 2 போட்டிகளில்தான் விளையாடியிருந்தது பாகிஸ்தான். இரண்டிலுமே அது தோல்வியைத்தான் தழுவியது. முதல் போட்டி நியூசிலாந்துடன் லாகூரில் நடந்தது. அதில் படு தோல்வி அடைந்தது. அடுத்து துபாய் சென்று இந்தியாவுடன் மோதியது. அதிலும் தோல்விதான். 3வது போட்டியில் வங்கதேசத்தைச் சந்தித்தது. ஆனால் மழை காரணமாக போட்டியே நடக்காமல் போனது. தொடர் தோல்விகளால் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது பாகிஸ்தான்.


இந்தப் போட்டித் தொடருக்காக ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஸ்டேடியங்களை பெரும் பொருட் செலவில் புதுப்பித்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். போட்டிக்கான மொத்த பட்ஜெட்டில் இந்த ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிக்கே 50 சதவீதத்தை அது செலவிட்டுள்ளது. 


தற்போது இந்த நஷ்டத்தை சரிக்கட்ட பல்வேறு சிக்கண நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளதாம் கிரிக்கெட் வாரியம். வீரர்களுக்கான செலவுகளையும் கூட குறைக்க அது உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்