பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

May 31, 2025,10:45 AM IST

டெல்லி:  இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோவிட் மீண்டும் பரவி வருகிறது. இது அபாயகரமானது இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் கூட இணை நோய்கள் உள்ளோர், வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.


மீண்டும் உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம், பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.


அதேசமயம், முதியோர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக நீண்ட நாள் இருக்கக் கூடிய இணை நோய்கள் உள்ளோர் தற்காப்பு நடவடிககைளை எடுப்பது நல்லது. உடம்பு சரியில்லாதவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டிலும் கூட  புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து பொது இடங்களுக்கு குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணியுமாறு தமிழ்நாடு அரசு நேற்று அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவிலான கொரோனோ  தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 2000 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. 


தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதேசமயம், தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்