பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

May 31, 2025,10:45 AM IST

டெல்லி:  இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோவிட் மீண்டும் பரவி வருகிறது. இது அபாயகரமானது இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் கூட இணை நோய்கள் உள்ளோர், வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.


மீண்டும் உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம், பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.


அதேசமயம், முதியோர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக நீண்ட நாள் இருக்கக் கூடிய இணை நோய்கள் உள்ளோர் தற்காப்பு நடவடிககைளை எடுப்பது நல்லது. உடம்பு சரியில்லாதவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டிலும் கூட  புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து பொது இடங்களுக்கு குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணியுமாறு தமிழ்நாடு அரசு நேற்று அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவிலான கொரோனோ  தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 2000 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. 


தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதேசமயம், தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்