டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோவிட் மீண்டும் பரவி வருகிறது. இது அபாயகரமானது இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் கூட இணை நோய்கள் உள்ளோர், வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மீண்டும் உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம், பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், முதியோர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக நீண்ட நாள் இருக்கக் கூடிய இணை நோய்கள் உள்ளோர் தற்காப்பு நடவடிககைளை எடுப்பது நல்லது. உடம்பு சரியில்லாதவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் கூட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து பொது இடங்களுக்கு குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணியுமாறு தமிழ்நாடு அரசு நேற்று அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவிலான கொரோனோ தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 2000 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதேசமயம், தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}