- ஔவை அ.ர.தீபாரவி
வறண்ட நிலம் மேல் நோக்கிப் பார்த்ததென்ன
உருண்டு திரண்டு முகிற்கூட்டம்
ஒன்று சேர்ந்ததென்ன!
காருண்ட வெண் பொதிகள் கரைந்தே அழுததென்ன!
வெள்ளி நிறத் துளிகள்
மண்ணோக்கி
விழுந்ததென்ன
உறங்கிக் கிடந்த விதைகளும் துளிர் விட்டதென்ன

கிளைகளும் அசைந்தாடி அழகிய
நடனம் ஆடியதென்ன
சில்லென்ற காற்று நெஞ்சோரம் சிம்பொனி பாடியதென்ன
அள்ளுகின்ற மண்வாசம்
நாசி வழியே
நுழைந்ததென்ன
சொல்கின்ற சொல்லெல்லாம் பசுமை நிறம் குடிகொண்டதென்ன
காண்கின்ற காட்சியெல்லாம் களிப்பு வந்து கூடியதென்ன
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
ஒருவர் துயரம் ஒருவர் தாங்கி உலகை காப்போம்!
அன்னை தடாதகை 7
என்னவள் மனம்!
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
ஆலோலம் பாடும் ஆத்தோர மாங்குயிலே
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
மகத்தான மாற்றம்!
ஒரு காலத்தில் இரத்த சிவப்பில்.. கைப்பை!
சிந்திப்போம்.. அழகானவர்கள் அனைவரும் அன்பானவர்களா??
{{comments.comment}}