பூத்தூவும் வானம்

Jun 26, 2026,03:21 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி 


வறண்ட நிலம் மேல் நோக்கிப் பார்த்ததென்ன


உருண்டு திரண்டு முகிற்கூட்டம் 

ஒன்று சேர்ந்ததென்ன!


காருண்ட வெண் பொதிகள் கரைந்தே அழுததென்ன!


வெள்ளி நிறத் துளிகள்

மண்ணோக்கி

விழுந்ததென்ன


உறங்கிக் கிடந்த விதைகளும் துளிர் விட்டதென்ன




கிளைகளும் அசைந்தாடி அழகிய 

நடனம் ஆடியதென்ன


சில்லென்ற காற்று நெஞ்சோரம் சிம்பொனி பாடியதென்ன


அள்ளுகின்ற மண்வாசம்

நாசி வழியே

நுழைந்ததென்ன


சொல்கின்ற சொல்லெல்லாம் பசுமை நிறம் குடிகொண்டதென்ன


காண்கின்ற காட்சியெல்லாம் களிப்பு வந்து கூடியதென்ன


(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

news

இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

news

சுதந்திரம் எனும் ஒளி

news

சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்