அன்பைக் கடன் வாங்கி!

Jun 19, 2026,03:28 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


கண்டநொடி சிந்தையிலே காதலாய்ப் பிறக்கும்


மண்டைக்கணம் வந்தப்படி மர்மமாய் இருக்கும்


உண்டதெல்லாம் வேணாமென்று  ஊணுறக்கம் கெடுக்கும்


கொண்டதெல்லாம் அன்பென்று கொட்டுமுரசு அடிக்கும்


தொண்டைக்குழி விறைக்க விடியவிடியக் கதைக்கும்


சண்டை பலயிட்டு சமாதானமும் பேசும்


கிண்டலாகத்தான் பேசிப்பேசி 

கிறுக்கு பிடிக்க வைக்கும்


வண்டெல்லாம்  காதோரம் வண்ணத்தமிழ் 

பாட்டிசைக்கும்




அண்டத்தில்  பிரியாத காதலர்களென்று முடியும் சூடும்


பிண்டத்தில் மாற்றமேற்படப் பிரிவையும் கூட்டும்


வேண்டாமென்று 

தூக்கியெறிந்து

வேலையும் பாய்ச்சும்


வறண்டுப் போன 

பாழ்நிலமாக உள்ளமும் நொருங்கும்


புரண்ட தடம்மாற பிரண்டு படுத்து

தலையணையையும்

நனைக்கும்


இருண்ட வாழ்வாய்

இரவுப் பகல் கண்ணீர் வடிக்கும்


அகண்ட விழித் திறந்து நினைவுகளையும் மீட்டும்


கெண்டை மீனாய் 

துடிதுடித்து பந்தப்பாசம் வெறுக்கும்


அண்டை வீட்டுக்காரர்களுக்கு தெரிந்தால் அடிக்கடி அலாரமடிக்கும்


உருண்ட உலகமும் உனக்கு எதிராய் நிற்கும்


வேண்டியதெல்லாம் நடக்குமா இங்கே வேதனைக்கு 

பஞ்சமில்லே


அன்பை அடமானம் வைத்து

சிரிப்பை கடன் வாங்கி


வெளியுலகத்துக்காக 

கொஞ்சமாக வலியை மறைத்து சிரித்து


மிச்சத்தை துட்சமாக எண்ணி

வாழ்ந்து விட்டு போகின்றேன் நானுமிங்கே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்