- டிலாணி ஸ்ரீதரன்
அப்பா என்பவர் நம் உயிர் மட்டுமல்ல நம் உலகம்,
உயிரணுவில் நம்மை உருவாக்கி தாய்மையெனும் புனிதம் காத்தவரப்பா,
கருவில் வந்த நாள் தொட்டு கற்பனையைத் தீட்டியவரப்பா,
தொட்டுத் தொட்டுப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தவரப்பா,
உன் விரல் பிடித்த தொப்புள் கொடியுறவு நான் தானே அப்பா,
தன் வியர்வையை சிந்தி என்னை விளை நிலம் ஆக்கினாரெம்மை,
உளிக் கொண்டு தன்னைத்தானே செதுக்குவார் அப்பா,
ஊமையாய் அவர் இருந்து உருகி உருகியே உயர்த்துவார் நம்மை,
நம் வாழ்க்கையே ஒளி பெற செய்த உன்னதமே,
நான் முதல் ஏறிய விமானம் உன் தோள் தானே அப்பா,
உலகத்தை சுற்றிக் காட்டிய ஒப்பற்ற அற்புதக் கடவுளே நீதானப்பா,
கந்தையாடை உன் சொந்தமானாலும்
விந்தைகள் படைக்க பிரம்மன் செதுக்கிய ஓவியம் நீதானப்பா,

வம்சத்தின் ஆணிவேரே வாழ்க்கைப் பாடத்தில் வீரத்தின் அடையாளமே,
வாடாத முகமும் ஓயாத கால்களும் எங்களுக்காகவே,
பனி,மலை, குளிர், இரவு பகலிலும் நின் பணி
குடும்பத்துக்காகவே,
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன் உங்களை.....
எங்களுக்கு முதலாக இருப்பதால் தான் உங்கள் பெயரின் முதல் எழுத்து எங்களுக்கு,
பத்து மாதம் கருவில் சுமக்கவில்லை என்பது உண்மை தான்
ஆனால் வாழ்நாளையே எங்களுக்காக அர்ப்பணித்த தெய்வம் தாங்கள்,
கடவுள் தந்த வரமல்ல தாங்கள் அப்பா,
கடவுளாகவே எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் தான் அப்பா!
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
விநாயகர் துதி
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்!
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}