டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக 100 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது இந்தியா.
சீனாவின் ஹாங்ஷோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தினசரி தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஒரு பதக்கம் விடாமல் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் இருந்து வருகிறது. முதல் மூன்று இடங்களில் சீனா, ஜப்பான், கொரியா ஆகியவை உள்ளன.
இந்த நிலையில் இன்று இந்தியா தனது 100வது பதக்கத்தைப் பெற்றது. இந்திய மகளிர் கபடி அணி சீன தைபே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு 100வது பதக்கத்தை வென்று கொடுத்தனர்.

இந்திய அணிக்கு மேலும் சில பதக்கங்கங்கள் ஏற்கனவே உறுதியாகியுள்ளன. வில்வித்தை, பேட்மிண்டன், ஆடவர் கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி 3வது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த முறை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது நினைவிருக்கலாம்.
இந்தியா இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்றதில்லை. முதல் முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}