நீ வரும்வரை

Jul 01, 2026,03:45 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


நிலவே

நீ அழகுதான்

இல்லையென்று

சொல்லவில்லை


ரசிக்கத் தான் முடியும்

அருகே வரப்போவதில்லை


கதிரே

நீ கண்ணைப் பறக்கும்

செம்மை தான்


எழுவதும்

விழுவதுமாகவே நீ

ஆனால்

நான் வரமுடியாது


மழையே

வரும்முன்

குளிரூட்டி

வெள்ளிக் கம்பியின்

சாரலாய் வரும்போது




இரு கை விரித்து

உன்னை நாவில் சுவைத்து  சுற்றிச்சுற்றி

மகிழ்ந்த காலங்கள்

நினைவுகளிலே


ஆனால்

இப்பொழுதோ

நிலவுகாய்க்கிறது

கதிரே குளிர்கிறது

மழையை  வெறித்துப்

பார்த்துக்கொண்டே


அது ஏன்?

எப்படி இப்படி?

தோழியிடம்  கூறினேன்


உன் நெஞ்சத்தில்

அவன் மஞ்சம் கொண்டு தஞ்சம் என்றாள்


ஓஓஓஓஓ

அது தானா  இந்த மாற்றம்


ம்ம்ம்

அவனுக்கும்  மாற்றம்

வந்திருக்குமோ!!

எப்படி அறிவது


வண்டேஏஏஏ. அறிந்து வாஆ

காற்றேஏஏஏ அறிந்து வாஆ


மழையேஏஏ

அறிந்து வாஆஆ


வரும்வரை

இணையா   இசையுடன்

இவள்........

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்