- பாவலர் மாயோன் மங்கை
நிலவே
நீ அழகுதான்
இல்லையென்று
சொல்லவில்லை
ரசிக்கத் தான் முடியும்
அருகே வரப்போவதில்லை
கதிரே
நீ கண்ணைப் பறக்கும்
செம்மை தான்
எழுவதும்
விழுவதுமாகவே நீ
ஆனால்
நான் வரமுடியாது
மழையே
வரும்முன்
குளிரூட்டி
வெள்ளிக் கம்பியின்
சாரலாய் வரும்போது

இரு கை விரித்து
உன்னை நாவில் சுவைத்து சுற்றிச்சுற்றி
மகிழ்ந்த காலங்கள்
நினைவுகளிலே
ஆனால்
இப்பொழுதோ
நிலவுகாய்க்கிறது
கதிரே குளிர்கிறது
மழையை வெறித்துப்
பார்த்துக்கொண்டே
அது ஏன்?
எப்படி இப்படி?
தோழியிடம் கூறினேன்
உன் நெஞ்சத்தில்
அவன் மஞ்சம் கொண்டு தஞ்சம் என்றாள்
ஓஓஓஓஓ
அது தானா இந்த மாற்றம்
ம்ம்ம்
அவனுக்கும் மாற்றம்
வந்திருக்குமோ!!
எப்படி அறிவது
வண்டேஏஏஏ. அறிந்து வாஆ
காற்றேஏஏஏ அறிந்து வாஆ
வரும்வரை
இணையா இசையுடன்
இவள்........
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
மூவரி கவிதைகள்.. சிறுமியின் சிரிப்பில் ஜவ்வு மிட்டாய் காளியின் நாவு
மருத்துவர் தினம்.. டாக்டர் தான் என் தெய்வம்!
சிந்தனைச் சிதறல்.. விதையிட்டு வளர்த்தவருக்கே முதலுரிமை!
National Doctor's Day: இந்தியாவில் டாக்டர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா..?
தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு கலை ரத்னா விருது
அப்பா கண்ணாடி!
Short Story: கோகிலா
{{comments.comment}}