புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?

Oct 03, 2025,06:28 PM IST

மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தங்களைக் கைது செய்யத் தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமீன் கோரியும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று மாலை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரையும் இரவோடு இரவாக கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது கரூர் காவல்துறை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். அவர் சார்பிலும் நிர்மல் குமார் சார்பிலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் இன்று நீதிபதி ஜோதிராமன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


இன்றைய விசாரணையின்போது தவெக தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நாங்கள் கொலை செய்யும் நோக்கில் செயல்படவில்லை. நடந்தது விபத்து. காவல்துறை நடத்திய தடியடியே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்பது உள்பட பல்வேறு வாதங்களை தவெக தரப்பு வைத்தது. பதிலுக்கு காவல்துறை தரப்பிலும் கடுமையான பதில் வாதங்கள் வைக்கப்பட்டன.




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் கடுமையான பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் நீங்கள். அப்படியானால் கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்களா என்று தவெக தரப்பை நோக்கி கேட்டார். 


காராசரமான விவாதத்திற்குப் பின்னர் இன்று மாலையில் இருவரது முன்ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.


இதையடுத்து இரு நபர் பெஞ்ச்சில் தவெக தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், புஸ்ஸி ஆனந்த்தையும், நிர்மல் குமாரையும் இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்