புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?

Oct 03, 2025,06:28 PM IST

மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தங்களைக் கைது செய்யத் தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமீன் கோரியும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று மாலை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரையும் இரவோடு இரவாக கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது கரூர் காவல்துறை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். அவர் சார்பிலும் நிர்மல் குமார் சார்பிலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் இன்று நீதிபதி ஜோதிராமன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


இன்றைய விசாரணையின்போது தவெக தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நாங்கள் கொலை செய்யும் நோக்கில் செயல்படவில்லை. நடந்தது விபத்து. காவல்துறை நடத்திய தடியடியே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்பது உள்பட பல்வேறு வாதங்களை தவெக தரப்பு வைத்தது. பதிலுக்கு காவல்துறை தரப்பிலும் கடுமையான பதில் வாதங்கள் வைக்கப்பட்டன.




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் கடுமையான பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் நீங்கள். அப்படியானால் கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்களா என்று தவெக தரப்பை நோக்கி கேட்டார். 


காராசரமான விவாதத்திற்குப் பின்னர் இன்று மாலையில் இருவரது முன்ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.


இதையடுத்து இரு நபர் பெஞ்ச்சில் தவெக தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், புஸ்ஸி ஆனந்த்தையும், நிர்மல் குமாரையும் இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்