ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Jul 28, 2025,08:34 PM IST

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஸ்ரீநகர் அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.




லிட்வாஸ் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 3 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று தெரிகிறது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.


ஹர்வான் பகுதியின் முல்நார் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது கூடுதல் படையினர் அனுப்பப்ட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?

news

அப்பா கண்ணாடி!

news

My Mom .. என் அம்மா!

news

Vaiko gets angry: ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

news

அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?

news

அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

news

வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி

அதிகம் பார்க்கும் செய்திகள்