ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Jul 28, 2025,08:34 PM IST

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஸ்ரீநகர் அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.




லிட்வாஸ் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 3 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று தெரிகிறது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.


ஹர்வான் பகுதியின் முல்நார் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது கூடுதல் படையினர் அனுப்பப்ட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. 7 விக்கெட்களுக்கு 175 ரன்கள்

news

பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!

news

நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!

news

அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?

news

அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்‌ கோவில் மலைப்பயணம்!

news

Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

news

சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

அதிகம் பார்க்கும் செய்திகள்