ஆதரவு பெருகுது.. எதிரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள்.. பணிகளை வேகப்படுத்துவோம்.. விஜய்

Sep 21, 2025,03:44 PM IST
சென்னை: நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.  ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரக் கூட்டங்களைத் தொடங்கி இதுவரை 4 மாவட்டங்களில் பேசி முடித்துள்ளார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பேசினார். நேற்று நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பேசினார். முதல் சுற்றுப் பேச்சை விட 2வது சுற்றுக் கூட்டங்களில் அவர் பேசிய பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்தை பகிரங்கமாக அவர் விமர்சித்துப் பேசியதும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. விஜய் பேச்சுக்கு இதுவரை முதல்வர் தரப்பிலோ அல்லது திமுக தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக எந்த பதிலடியும் தரப்படவில்லை. 

இந்த நிலையில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். அதில் அவர் கூறியிருப்பதாவது:





என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.

இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம். 

நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். 

ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.  



தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்! 

புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் நேற்று நாகையில் பேசியபோது எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அந்தத் தொகுதி எம்எல்ஏவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் கடும் காட்டமான பேட்டி கொடுத்து பெரும் விளக்கத்தையும் பதிலடிாயக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜிஎஸ்டி திருவிழா நாளை முதல் தொடங்குகிறது.. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.. பிரதமர் மோடி

news

ஆதரவு பெருகுது.. எதிரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள்.. பணிகளை வேகப்படுத்துவோம்.. விஜய்

news

ஆர்.என். ரவி, அண்ணாமலை இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.. விசிக கடும் தாக்கு

news

BCCI தலைவராகிறார் மிதுன் மன்ஹாஸ்.. காஷ்மீரைச் சேர்ந்தவர்.. சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்

news

H-1B விசா குழப்பம்.. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் கட்டண உயர்வு.. அமெரிக்க அரசு விளக்கம்

news

என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

news

நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

news

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதிகம் பார்க்கும் செய்திகள்