"பச்சோந்தி"யாக மாறிய வாட்ஸ் அப்.. இந்த புது அப்டேட்டைக் கவனிச்சீங்களா மக்களே.. சூப்பரா இருக்கே!

Jan 11, 2024,05:43 PM IST

சென்னை: இதுவரை வாட்ஸ் அப் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சி அளித்து வந்த நிலையில், இனி பல்வேறு நிறங்களில் வாட்ஸ் அப் செயலியின் தீமை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


"காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை.. "அம்மா" கிடையாது.. "மம்மி"யும் கிடையாது.. மாறாக வாட்ஸ் அப்தான்!,. இன்று வாட்ஸ் அப்பில் தான் பெரும்பாலானவர்கள் கண் விழித்து முதலில் பார்க்கின்றனர்.  அந்த அளவிற்கு வாட்ஸ்அப் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.


உலகம் முழுவதும் பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஐந்து நிறங்களில் செயலியின் தீமாக  கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இனி பயனர்கள் தங்களுக்கு ஏற்றார் போல நிறங்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




புதிய அப்டேட்டின் படி வாட்ஸ் அப் செயலி ஐந்து வெவ்வேறு நிறங்களில் தீம்களில் வரும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோட்டிபிகேஷன் நிறங்களை கூட பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்தாற்  போல மாற்றிக் கொள்ள முடியும்.


இதுக்கு நாம என்ன செய்யணும் தெரியுமா?


உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios சாதனத்தில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.


வலது மேல்  மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.


செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


சாட்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.


தீம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.


இந்தப் பக்கத்தில் சிஸ்டம் டீபால்ட், லைட் மற்றும் டார்க் ஆகியவை இருக்கும். அதன் பின் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என 5 நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்