சென்னை: இதுவரை வாட்ஸ் அப் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சி அளித்து வந்த நிலையில், இனி பல்வேறு நிறங்களில் வாட்ஸ் அப் செயலியின் தீமை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
"காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை.. "அம்மா" கிடையாது.. "மம்மி"யும் கிடையாது.. மாறாக வாட்ஸ் அப்தான்!,. இன்று வாட்ஸ் அப்பில் தான் பெரும்பாலானவர்கள் கண் விழித்து முதலில் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஐந்து நிறங்களில் செயலியின் தீமாக கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இனி பயனர்கள் தங்களுக்கு ஏற்றார் போல நிறங்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்டின் படி வாட்ஸ் அப் செயலி ஐந்து வெவ்வேறு நிறங்களில் தீம்களில் வரும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோட்டிபிகேஷன் நிறங்களை கூட பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்தாற் போல மாற்றிக் கொள்ள முடியும்.
இதுக்கு நாம என்ன செய்யணும் தெரியுமா?
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios சாதனத்தில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.
வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சாட்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தீம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பக்கத்தில் சிஸ்டம் டீபால்ட், லைட் மற்றும் டார்க் ஆகியவை இருக்கும். அதன் பின் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என 5 நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}