- இரா.மும்தாஜ் பேகம்
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுனர்.
வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்
பெய்கின்றது மழை.
மணத்திற்கா, பிணத்திற்கா அறியாத போதும்
மலர்கின்றன மலர்கள்.
ஏழைக்கா, எஜமானனுக்கா,
அறியாத போதும் வீசுகின்றது காற்று.
இன்பமா, துன்பமா?
அறியாத போதும் துடிக்கின்றது இதயம்...
குருதியை பாலாக்கிக் கொடுத்திடும் பசு
இருளினை நீக்கிட இலகிடும் மெழுகு.

பசியினை போக்கிட பழம் தரும் சோலை மா.
உலகம் உய்ய உணவளிக்கும் நிலமகள்.
பலனை எதிர்பாராமல் உதவி செய்பவர்
மழையைப் போன்ற மாமனிதர்.
இல்லை என்றிருப்பவர் வாழ்வில்
ஒளிவிடும் சுடரை போன்ற புனிதர்.
உழைத்துச் சேர்த்த பொருட்களின் மிகுதி
வறியவர்க் களிப்பர்.
கொடுத்து மகிழ்வதில் கிடைக்கும் இன்பம் வேறெ திலும் கிடைக்காதே...
(இரா. மும்தாஜ் பேகம், திருச்சி)
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
{{comments.comment}}