- இரா.மும்தாஜ் பேகம்
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுனர்.
வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்
பெய்கின்றது மழை.
மணத்திற்கா, பிணத்திற்கா அறியாத போதும்
மலர்கின்றன மலர்கள்.
ஏழைக்கா, எஜமானனுக்கா,
அறியாத போதும் வீசுகின்றது காற்று.
இன்பமா, துன்பமா?
அறியாத போதும் துடிக்கின்றது இதயம்...
குருதியை பாலாக்கிக் கொடுத்திடும் பசு
இருளினை நீக்கிட இலகிடும் மெழுகு.

பசியினை போக்கிட பழம் தரும் சோலை மா.
உலகம் உய்ய உணவளிக்கும் நிலமகள்.
பலனை எதிர்பாராமல் உதவி செய்பவர்
மழையைப் போன்ற மாமனிதர்.
இல்லை என்றிருப்பவர் வாழ்வில்
ஒளிவிடும் சுடரை போன்ற புனிதர்.
உழைத்துச் சேர்த்த பொருட்களின் மிகுதி
வறியவர்க் களிப்பர்.
கொடுத்து மகிழ்வதில் கிடைக்கும் இன்பம் வேறெ திலும் கிடைக்காதே...
(இரா. மும்தாஜ் பேகம், திருச்சி)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}