- கவிஞர் க.முருகேஸ்வரி
அவனுக்குத் தெரியும்....
அவனுக்குப் புரியும்...
அவன் அரவணைப்பான்..
அவன் உடனிருப்பான்...
அவன் மன்னிப்பான்....
அவன் சரி செய்வான்...
அவன் ஆறுதல் படுத்துவான்....
அவன் என் அழகைக் கூட்டுவான்....
எனக்குள் இருப்பான்....
என் நிழலாக வருவான்...

தேவையானது
அனைத்தும் தருவான்....
எனக்குத் தெரிந்த அனைத்தும்
அவன் அளித்தது...
தெரியாதது
அனைத்தும்
அவன் கொடுக்கப் போவது.....
அவன் தைரியம் கொடுப்பான்...
அவன் தன்னம்பிக்கை தருவான்...
வெற்றிக்கு வித்திடுவான்...
எப்போது எது வேண்டுமோ
அதைக் கொடுப்பான்..
என் உயிர் காப்பான்...
என் உறவுகளையும் காப்பான்...
அவன் பார்த்துக் கொள்வான்....
எனக்கு இடையூறு ஏற்படும் எனில்...
அவன் பார்த்துக் கொல்வான்....
எனக்கு எல்லாம் அவனே!!!
அவன் இருப்பதால்
நான் இருக்கிறேன்...
அவன் கொடுத்ததால்
நான் படைக்கிறேன்....
அவனே என் அப்பன்
என் அய்யன் முருகன்
அவனுள் நான் என்று!!!!
ஓம் முருகா
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டி இல்லையா?
நீரே ஆதாரம்.. வாழ்வின் மூலாதாரம்.. Water is Life
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
Monday Motivation: உள்ளழிக்கல் - ஆகா? ஆகும்?
ஒற்றுமையால் உயர்வோம்!
வேண்டுதல்!
"என்னது... என் மாப்பிள்ளையைக் காணோமா?".. விஷாலின் விளையாட்டுகள் (3)
கட்டும் சேலை மடிப்பினிலே.. In the Fold of a Saree!
நில்லாமல் ஓடிக்கொண்டே இரு.. Arise and stop not, keep moving!
{{comments.comment}}