- கவிஞர் க. முருகேஸ்வரி
நீரில்லை நீயில்லை...
நீரின்றி உயிர் இல்லை
உலகில்லை......
நீரின் மகத்துவத்திற்கு எல்லையில்லை...
மனிதனே...
நீ அதைப் புரிந்து நடந்தால் ...
நீருக்கோ பஞ்சமில்லை....
மரம் நட்டால் மழை வருமே...
உயிர்க்கோளம் பிழைத்திடுமே.,..
மறந்தால்... வேற்றுக்கிரகம் வேண்டும் நிலை...
உன் சந்ததிக்கு ஏற்படுமே...
இயற்கை கொடுத்த வரத்தினை....

இயன்ற அளவு காத்திடு...
நெகிழி தவிர்த்து... நிலத்தடி நீர் உயர்த்தி...
நல்வாழ்வுக்கு வித்திடு...
நீரின்றி அமையாது உலகு....
மனம் வெறுத்த நிலையிலும்
மழை சத்தம் அதை மாற்றுமே....
வாழ்வே மாயம் என்றவனின்
காயம் கூட...
ஆற்று நீரைப் பார்க்கும் போதும்...
ஆழிக் கரையில் அமரும் போதும்....
கொட்டும் அருவியில் குளிக்கும் போதும்....
காயம் காற்றில் கரையுமே....
மாயமாகி மறையுமே...
வாழ்வில் வசந்தம் மலருமே....
நீர் நிலையைக் காப்போமே....
நீரும் வாழ்வும் நிலைபெற....
நீர் நிலையைக் காப்போமே....
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
Kalaiyarasi Muthuvel Poem: நிழல்!
சிந்தனைச் சிதறல்.. மனதைக் கட்டுப்படுத்தும் எசமான்.. நாம்தான்!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்
செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி
கருப்பு ... ஒரு விமர்சனப் பார்வை!
கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!
ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)
{{comments.comment}}