- கவிஞர் க. முருகேஸ்வரி
நீரில்லை நீயில்லை...
நீரின்றி உயிர் இல்லை
உலகில்லை......
நீரின் மகத்துவத்திற்கு எல்லையில்லை...
மனிதனே...
நீ அதைப் புரிந்து நடந்தால் ...
நீருக்கோ பஞ்சமில்லை....
மரம் நட்டால் மழை வருமே...
உயிர்க்கோளம் பிழைத்திடுமே.,..
மறந்தால்... வேற்றுக்கிரகம் வேண்டும் நிலை...
உன் சந்ததிக்கு ஏற்படுமே...
இயற்கை கொடுத்த வரத்தினை....

இயன்ற அளவு காத்திடு...
நெகிழி தவிர்த்து... நிலத்தடி நீர் உயர்த்தி...
நல்வாழ்வுக்கு வித்திடு...
நீரின்றி அமையாது உலகு....
மனம் வெறுத்த நிலையிலும்
மழை சத்தம் அதை மாற்றுமே....
வாழ்வே மாயம் என்றவனின்
காயம் கூட...
ஆற்று நீரைப் பார்க்கும் போதும்...
ஆழிக் கரையில் அமரும் போதும்....
கொட்டும் அருவியில் குளிக்கும் போதும்....
காயம் காற்றில் கரையுமே....
மாயமாகி மறையுமே...
வாழ்வில் வசந்தம் மலருமே....
நீர் நிலையைக் காப்போமே....
நீரும் வாழ்வும் நிலைபெற....
நீர் நிலையைக் காப்போமே....
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!
கவி கலையின் இரு கவிதைகள்!
எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!
சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
அவளா... இவள்!?
உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}