உனக்கு ஒன்று என்றால்!

Jul 13, 2026,03:36 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நான் இருமினால்

அது 

ஒன்றுமில்லை!


ஆனால் 

நீ இருமினால்

என் நெஞ்சம் வலிக்கிறது!


எனக்கு உடல்நலம் 

சரி இல்லை எனில்

அது சாதாரணம்!




ஆனால் உனக்கு ஒன்று என்றால் 

அது என் மனதுக்குப் 

பெரும் ரணம்!


எனக்கு ஒன்று என்றால் 

என் கண்களில் 

கண்ணீர் கசியும்!


அதுவே உனக்கு ஒன்று 

என்றால் எனது

நெஞ்சில்  உதிரம் வழியும்!


எனக்கு ஒன்றென்றால் 

மருத்துவமனைக்குச் 

செல்வேன்!


ஆனால் உனக்கெனில்

கோயில் கோயிலாகத்

தவம் இருப்பேன்!


எனக்கு ஒன்று என்றால் 

அதனைத் தூக்கத்தில் 

மறப்பேன்! 


உனக்கு ஒன்று என்றால் 

எனது தூக்கத்தையேத்

துறப்பேன்!


என்னவளே! நீ

எப்போதும் நன்றாக 

இருக்க வேண்டும்! 


இறைவா! அதற்கு 

நான் என்ன 

செய்ய வேண்டும்? 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்