- டி. ஜெனிட்டா ரீனா
அம்மா என்பவர்
அன்பின் பிறப்பிடம்
பாசத்தின் உறைவிடம்
நேசத்தின் தோழி
பரிவு காட்டும் தேவதை
பண்புகளை கற்றுத்தரும் ஆசான்
கோபத்தால் குடும்பத்தை காப்பவர்
சுவாசமாய் அனைவரிலும் வாழ்பவர்
மலர் போன்ற மென்மையானவர்
பணிவு என்ற கவசத்தை உடையவர்

மணம் வீசும் பூந்தோட்டம்
அலை அலையாய்
அக்கறையாய் பின்தொடர்பவர்
மானம் காத்த குலதெய்வம்
வாரிசு பெற்றுத் தரும் மருமகள்
துறவி போன்று
தஎனக்கென்று பற்றில்லாதவர்
உயிர் அவளின் குடும்பம்
மூச்சு அவளின் பிள்ளைகள்
குடும்பத்தின் ஆணிவேர்
பந்தம் வளர்க்கும் குலவிளக்கு
பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும்
வழி காட்டும் நடமாடும் வங்கி!
தன் கடமையை அன்பால் செய்யும்
தீர்க்க முடியாத அன்புக்கடன்
அன்பெனும் வட்டிக்கடனை என்றும் அடைக்க
முடியாத கடனாளியாக நான்
உழைப்பின் சிகரம்
உயர்வின் மலை
உண்மையின் தவம்
நேர்மையின் புகலிடம்
துணிச்சல் மிக்க வீரமங்கை
தாலாட்டுப் பாடும் இசைக்குயில்
நாங்கள் இன்பம் பொங்க வாழ
துன்பங்கள் பலவற்றைச் சகிப்பவள்
குடும்பத்தின் குலப்பெருமை காப்பவள்
உடல் மெலிந்தாலும் உறவுகளைக் காப்பவள்
உண்டி கொடுத்து எங்கள் பசி போக்கி
உயிரைத் தந்து உயர்த்தியவள்
பார் போற்றும் மாமனிதர்—அவர்
என் அன்பு அம்மா
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}